தோழர் பவானின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, May 5th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவானின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் கட்சிக்கொடி போத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொண்டமானாற்றை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் ஜெஜயக்குமார் என்னும் இயற்பெயருடைய தோழர் பவான் நேற்று முன்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக தனது 51ஆவது வயதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

இந்நிலையில் தோழர் பவானின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அங்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் அமரரின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தனர்.

அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்  உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.

இதேவேளை அமரரின் இழப்பு தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: