தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 28th, 2020

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கே அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் சிறிய கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவும் ஒன்றிணைந்து 3 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா முதலீட்டு சுயசக்தி கடன் யோசனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, வர்த்தக வங்கிகள் ஊடாக குறித்த கடன் யோசனை நடைமுறைப் படுத்தப்பட்டதுடன், முன்னேற்றகரமான திட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கடன் வழங்கப்பட்டது.

இதன்படி, குறித்த கடன் திட்டத்தின் மூலம் இதுவரை 13 ஆயிரத்து 890 தொழில் முயற்சியாளர்களுக்கு 3 ஆயிரத்து 64 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு 18 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஒரு மில்லியன் ரூபாவரை அதிகபட்ச கடன் வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் - அரச ஊழியர்களுக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு !
அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றது தமிழ்த் தரப்பு - நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில்...
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் - வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...