தொடருந்து சேவை பாதிப்பு!

Monday, December 24th, 2018

தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, நாடு முழுவதும் தொடருந்து மூலமான பொதி பரிமாற்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதிப்பரிமாற்றல் நடவடிக்கையின் போது நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு மாறாக தொடருந்து நிலைய அதிபர்கள் செயற்பட்டமையால், இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2 வருடங்களாக நிலவிய இந்த முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்த போதும் தீர்வு கிடைக்கவில்லை.

குறித்த பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் சுமார் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதிகள் தொடருந்து நிலையங்களில் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts:

நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத...
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது - வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!