தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய்கள் இறக்குமதி!
Friday, January 5th, 2018
எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு 2 இலட்சத்திற்கு அதிகமான தேங்காய்களை எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் நியாயவிலையில் விற்பனைசெய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது வேண்டுதலுக்கு அமைய இந்ததேங்காய்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஒருவருக்கு 65 ரூபா வீதம் 10 தேங்காய்கள் குருநாகல் பெருந்தோட்ட விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தனதெரிவித்துள்ளார்.
தமது நிறுவனத்திற்குட்பட்ட தோட்டங்களில் தைப்பொங்கலை முன்னிட்டு பணியாற்றும் சுமார் 4000 பேருக்கு உலர் உணவும் தேங்காய்களும் சலுகை விலையில் வழங்கப்படுவதாகஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!
"தீடையில்" தங்கியிருந்து தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் -ஈ.பி.டி.பியின் மன்னார...
சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில் சட்ட நிறுவனங்களை அணுகியது நிதி அமைச்சு!
|
|
|
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் - பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்...
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு - திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா...
தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக ...


