தைப்பொங்கலுக்கு முதல்நாள் தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு!
Thursday, January 17th, 2019வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வடக்கு மாகாண ஆளுநரால் விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் இடம்பெற்றதாகப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் வீட்டில் நின்று தைப்பொங்கலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும் குடும்பத்தாருடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த விடுமுறை அறிவிப்பு ஆளுநரால் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தனியார் கல்வி நிலையங்கள் முழு நேர வகுப்புக்களை நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடத்தி ஆளுநரால் வழங்கப்பட்ட விடுமுறையை அர்த்தமற்றதாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
Related posts:
சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்!
கடற்றொழில் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரைய...
|
|