தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Monday, April 11th, 2022இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்திற்காக இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் டீசலும் ஒரு லட்சத்து பத்தாயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
எரிபொருளுடனான கப்பல்கள் பல அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீர்ப்பாவனை அதிகரிப்பு - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை!
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது - அமைச்சர் ...
சீரற்ற வானிலையால் எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம் - மறு அறிவிப்பு வரை காத்திருக்குமாறு பொது...
|
|