தேவைப்பாடு வெகுவாக அதிகரிப்பு: பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Friday, August 13th, 2021

நாட்டில் பிராணவாயுவுக்கான தேவைப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது உச்சபட்ச அளவில் பிராணவாயு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கு மாற்றீடாகவே வெளிநாடுகளில் இருந்து பிராணவாயு இறக்குமதி செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன் இது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறவுள்ளது.

மேலும் வைத்தியசாலைகளுக்கு அருகிலேயே பிராணவாயுவை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களும் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உச்ச அளவில் பிராணவாயு உற்பத்தி இடம்பெறுகின்ற நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: