தேசிய பட்டியில் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஆகஸ்ட் 12 இல் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவியேற்பு!

Sunday, August 9th, 2020

புதிய நாடாளுமன்றத்தின் தேசிய பட்டியில் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்பட்டால், அமைச்சரவை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வானது ஆகஸ்ட் 12 ஆம் திகதி இடம்பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதியமை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வானது கண்டி மகுல் மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையானது மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அமையப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் 26 என்ற மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்களே இருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சு பதவிகளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, டலஸ் அலஹபெரும, விமல் வீரவன்ச, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, உதய கம்மன்பில, ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்த, மஹிந்தானந்த அழுத்கமகே ஆகியோரே புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக தெரிய வருகிறது.

Related posts: