தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக் கொள்வது குறித்த அறிவித்தல் வெளியானது!
Friday, September 4th, 20202020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.
www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Online ஊடாக விண்ணப்பித்தல் குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து 0112 787303 அல்லது 0112 787385 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாடு பூராகவும் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறும் 50 பாடநெறிகளுக்காக 4,253 பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மகிழூர்தி வாங்கவுள்ளவர்களுக்கு மற்றும் பாவனையார்களுக்கு ஓர் நற்செய்தி!
17 ஆயிரம் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம் - இராஜாங்க அ...
பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த நடவடிக்கை - புதிய செயற்குழு...
|
|