தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கு தெல்லிப்பழை பொலிசார் தீவிர நடவடிக்கை!

Tuesday, December 5th, 2023

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன், தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சீசி.ரீ.வி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில், நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இந்த சம்பவத்தின் போது, துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றில் பிரவேசித்த குழுவொன்று குறித்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், தெல்லிப்பழை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: