தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – வானிலை அவதான நிலைமை தெரிவிப்பு!

Monday, June 1st, 2020

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். இந்த நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வானிலை மையம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: