தென்னை சார் கைப்பணி பொருட்களின் பயிற்சி நெறிகள் ஆரம்பம்!

Thursday, March 21st, 2019

குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் தென்னை சார் கைப்பணி பொருட்களின் பயிற்சி நெறிகள் யாழில் நடைபெறவுள்ளன.

நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியில் உள்ள ‘திவ்விய ஜீவன ‘ மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் குறித்த பயிற்சிநெறிகள் நடைபெறவுள்ளது.

தென்னை பயிர்செய்கை சபையானது குறைந்த வருமானத்தை ஈட்டும் பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறே கைத்தொழில் செய்வதன் ஊடாக வருமானத்தை அதிகரிக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் விளக்குமாறு, துடைப்பம், சிரட்டை அலங்காரம், தென்னோலையிலான கைவேலைகள் என்பவற்றுக்கான பயிற்சி நெறிகளே வழங்கப்படவுள்ளன.

இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு நல்லூர் பிரதேச கற்பகதரு சங்க பெண்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: