துறைமுக ஒப்பந்தத்தின் மூலம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடு!

Friday, August 4th, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையடுத்து நேரடியபக வெளிநாட்டு முதலீடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிற்கு கிடைப்படுதன்   நாட்டிற்கு மேலும் நேரடி  முதலீடாக 300 மில்லியன்   அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டின் ஐந்தாவது நிதி கொள்கை தொடர்பாக கோட்டை, இலங்கை மத்திய வங்கியன் ஆளுநர் தலைமையகத்தில் நடைபெற்ற உடகவியலாளர் மகாநாட்டில் வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உரையாற்றினார்.

வறட்சியினால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் பணவீக்கம் மேலும் குறைவடையும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும். ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரம் முறையான விதத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாக சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுனர்  நாட்டின் பொருளாதாரக் கொள்கை பற்றி சர்வதேச நாணய நிதியமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தேசிய பொருளாதாரம் இரண்டு தசம் எட்டு சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இயற்கை அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6 தசம் 8 சதவீத்தினால் அதிகரித்திருந்தது. பணவீக்கம் 6 தசம் ஒரு சதவீதத்தில் இருந்து நான்கு தசம் 8 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது என்றம் கூறினார்.

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுனர் கூறினார். இவ்வருடத்தில் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த்தின் மூலம் 40 கோடி அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இவ்வாண்டில் 670 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related posts: