துயரம் நிறைந்த வாழ்விலிருந்த மக்களுக்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி  !

Saturday, June 2nd, 2018

கடந்தகாலத் துயரம் நிறைந்த வாழ்விலிருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிற்பனை ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய புதிய கட்டடத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தீவகப் பகுதியில் குறிப்பாக எமது வேலணை பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் வாழ்வாதார உதவிகளையும் மட்டுமல்லாது இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து நம்பிக்கை ஒளியை ஏற்றியிருந்தமையை எவரும் மறுக்கமுடியாது.

கடந்தகாலங்களில் எமது கட்சி, கிடைத்த வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காகவும் மிகச் சிறந்தமுறையில் முன்னெடுத்திருக்கின்றது.

அந்தவகையில் மக்கள் நலன் சார் பணிகளையோ அபிவிருத்தி சார் வேலைத்திட்டங்களையோ நாம் தொடர்ந்து செய்ய தயாரகவே இருக்கின்றோம் என்பதுடன் இக்கிராமத்தின் வளர்ச்சிக்கு இந்த சனசமூக நிலையம் மூலம் பல அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செய்ய முடியும் என நம்புகின்றோம்.

அந்தவகையில் எமது மக்களை கடந்தகாலத் துயரம் நிறைந்த வாழ்விலிருந்து மீட்டெடுப்பதற்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம். அந்தவகையில் இக்கிராமத்தின் வளச்சிக்கு நாம் எங்களால் இயன்ற உதவித்திட்டங்களை செய்வோம் என்றும் தெரிவித்த அவர் எங்கள் பலத்தை இன்னும் பலப்படுத்துங்கள் இப்பிரதேச மக்களது வாழ்வியலை நிச்சயம் நாம் ஒளிமயமானதாக உருவாக்கிக் காட்டுவோம்  அவர் என்றார்.

Related posts: