துப்புக்கொடுத்த இந்தியா – வழிமறித்தது இலங்கை!

Friday, July 12th, 2019

பாகிஸ்தான் கராச்சியிலிருந்து போதைப்பொருட்களை ஏற்றிவந்த இரண்டு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் குறித்த படகுகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளை எச்சரித்ததை அடுத்தே அவை இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக இந்திய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் இந்திய அதிகாரிகளிற்கு வழங்கிய தகவல்களை அவர்கள் இலங்கை அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இதனை அடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் தக்க தருணத்தில் நடவடிக்கை எடுத்து இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில்குறித்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களிற்கு இதன் மூலமே வருமானம் கிடைப்பதாகவும் இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கிடைக்கும் பணத்தை பயன்படுத்தியே அவர்கள் இலங்கையில் தீவிரவாத கொள்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்கின்றதாகவும் இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் போதைப்பொருட்களை கடல்வழியாக கடத்துவதே அவர்களிற்கு பாதுகாப்பானதாக காணப்படுகின்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: