தாதியர் பயிற்சிக்காக 3 ஆயிரத்து 315 மாணவர்கள் இணைத்துக் கொள்ள திட்டம் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Monday, July 10th, 2023
இலங்கையில் தாதியர் சேவைக்காக மேலும் 3315 மாணவர் தாதியர்களாக இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நியமனம் பெற்ற தாதியர் சேவைக்காக குழுவொன்றிற்கு ஆட்சேர்ப்பு கடிதங்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் உத்தியோகபூர்வமாக அமைச்சில் இன்று (10) காலை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய மாணவர்களுக்கும் இன்று (10) நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாதியர் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை - அமைச்சர் நி...
சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடு சென்றவர்க்ள கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் - இலங்கை வெள...
கூட்டமைப்பின் எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமிப்பர் - சஜித் அணியும் வருவது உறுதி அமைச்சர் பிரன்ன ரணதுங்க...
|
|
|


