தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை – இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவிப்பு!
Sunday, November 12th, 2023
இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (12) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவத்த மஹேல ஜெயவர்தன,
“தசுனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தசுனுக்கு உபாதை ஏற்பட்டது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட்டோம். அவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வேண்டும் என மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே சாமிகாவை அழைத்து வர வேண்டியிருந்தது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.
இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


