முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்!
Monday, December 5th, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts:
முப்படைகள் மற்றும் போலிஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர் - டக்ளஸ் தேவானந்தாவின...
தேசிய அடையாள அட்டைக்குரிய புகைப்படம் ஒன்லைன் மூலம்!
தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆண...
|
|
|


