தடையினை நீக்குமாறு ரஷ்யாவிடம் ஜனாதிபதி கோரிக்கை!
Monday, December 18th, 2017இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒரு வகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!
நேரக்காப்பாளர் பொலிசாரால் கைது: யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பதற்றம்.!
ஜனாதிபதி கோட்டாபய மீதான நம்பிக்கையே பாரிய வெற்றிக்கு காரணம் - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்...
|
|