தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குங்கள் – வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, June 23rd, 2021

தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதாரத் தொண்டர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் –

நாம் கடந்த சில வருடங்களுக்கு மேலாக எதுவித வேதனமும் இன்றி சுகாதாரத் தொண்டராக கடமையாற்றி இருந்தோம். இதுவரையும் எமது நியமனம் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமையால் கடந்த 2017-2018ஆம் ஆண்டுகளில் நியமனம் கோரி 120 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டதன் விளைவாக 2019.05.27, 2019.09.29 நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வழங்கப்பட்ட ஏனைய நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டது.

தற்போது எமது நியமனங்களில் கவனம் செலுத்தாது ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினூடாக எமது சுகாதாரத் தொண்டர் பட்டியலில் இருந்து சேவைக்காலம் குறைந்தவர்களையும், சுகாதாரதொண்டராக கடமையாற்றாதவர்களுக்குமான நேர்முகத்தேர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெறுகின்றது எனவே தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் தமக்கு நியமனம் வழங்குமாறு அவர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: