டெபோரா ரோஸ் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!

Thursday, June 3rd, 2021

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் நான்கு உறுப்பினர்கள் அடங்கலாக குறித்த யோசனை கடந்த 18 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அதில் உறுதிப்படுத்தப்படாத உண்மைக்கு புறம்பான விடயங்கள் அடங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

இந்த யோசனையின் ஒருதலைபட்ச தன்மையை ஆராயும் போது, அது மனித உரிமைகள் யோசனை இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காக, காங்கிரஸில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது எதிர்ப்பை எதிர்வரும் நாட்களில் காங்கிரஸ் சபையிலும், ஆசியா தொடர்பான உப குழுவின் பிரதிநிதிகளிடத்திலும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்திலும் முன்வைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: