டெங்கு: 5 மாதங்களில் 150 பேர் பலி!
Monday, June 12th, 2017
நாட்டில் இந்த வருடத்தில் முதல் 5 மாதங்களில் மாத்திரம் டெங்கு தொற்று காரணமாக, 150 பேர் வரையில் மரணித்துள்ளதாக, சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமையினால், நுளம்புகள் பரவக்கூடிய வகையிலான இடங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியுள்ளதாக, சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 6 மாதங்களில் மாத்திரம் 59 ஆயிரத்து 760 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 43 சதவீதம் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
குற்றச்செயல் பொறுப்பிற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
இலங்கை அருகாமையில் நில அதிர்வு!
கறுப்புப் பட்டியலில் இருந்த 5 அமைப்புகளின் தடையை நீக்கிய இலங்கை - அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!
|
|