டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, July 28th, 2017

காய்ச்சல் காரணமாக நாளாந்தம் 7 ஆயிரம் நோயாளர்கள் அரச மருத்துவமனைகளை நாடுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 301 பேர் வரை டெங்கு நோய் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தின் இதுவரையான 2 மாதக் காலப்பகுதி வரை டெங்கு தொற்றால் 48 ஆயிரத்து 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: