ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நடவடிக்கை – கொவிட் – டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நியமனம்!

Saturday, June 10th, 2023

கொவிட் – 19 மற்றும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நிபுணர்கள் குழுவின் தலைவராக வைத்தியர் சீதா அரமேபொல நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்;

நாட்டின் அ​னைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: