ஜனாதிபதி ரணில் – இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Sunday, February 5th, 2023இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை - இந்தியாவுக்கு இடையில் புதிய விமான சேவைகள்!
வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை - பாதுகாப்பு அமைச்சு !
கடந்த 24 மணிநேரத்தில் 762 கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 445 பேர் அடையாளம்!
|
|