ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் விஜயம்!
Thursday, March 22nd, 2018பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(22) பயணமாகின்றார்.
பாகிஸ்தான் சுதந்திரத்தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனபாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நுன் ஹூசேன் மற்றும் அந்நாட்டு பிரதமர் ஷாஹீத் கபான் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இரு நாடுகளுக்குமிடையில் 4 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சுதந்திரத் தினம் நாளை கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாணப் பிரதம செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் - மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு
விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!
இறைவரி திணைக்கள அதிகாரிகள் வேலைநிறுத்தம்!
|
|