ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்கம்!
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.
தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வை புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!
யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என ...
கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் - அரச மரு...
|
|
|


