ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவென் – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
Tuesday, December 19th, 2023எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கு அமைச்சர்களின் ஆதரவும் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதிலும், தாம் அதில் போட்டியிடப் போவதாகக் குறிப்பிடுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
முதியோருக்காக புதிய யாப்பு.!
மக்கள் ஆணையுடன் ஜெனீவா தீர்மானத்திலிருந்தும் நிச்சயம் வெளியேறுவோம் – அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவி...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் உதிர்வுகூறல்!
|
|