ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி? – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை நிறுத்துங்கள- கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்க...
இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெ...
சட்டத்தின் ஆட்சியை புறக்கணித்ததால்தான் நமது நாடு சரிந்தது - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்கா...