ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!
Saturday, January 30th, 2021ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில் – “ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமானதாகவே காணப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை நாம் உயர் மட்டத்தில் பேணி வருகின்றோம்.
மேலும் ரஷ்யாவின் தேயிலை இறக்குமதித் துறையில், இலங்கை பாரிய பங்காற்றி வருகின்றது” எனவும் மரியா ஜாகரோவா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மீண்டும் போர்ட் சிட்டி ஆரம்பம்.!
மண்டைதீவில் படகு விபத்து : 6 மாணவர்கள் பரிதாப பலி!
நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நடைமுறை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரி...
|
|