செவ்வாய்முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு!
Saturday, May 23rd, 2020
சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அனுமதி வழங்கப்பெற்றால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை - வர்த்தக அமைச்சர் அறி...
மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|
|


