செயன்முறைப் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

Thursday, June 13th, 2019

இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான செயன்முறைப்பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

க.பொ.த உயர்தர் மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறும். அதே போன்று சாதாரண தர மாணவர்களின் செயன்முறைப்பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: