சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை: 65 டொலர் அறவிடவும் தீர்மானம்!

Tuesday, June 23rd, 2020

ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த பரிசோதனைகளுக்காக 65 டொலர் பணம் அறிவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

PCR பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களில் கிடைக்கும் வரையில் வெளி நாட்டவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும். அதற்கமைய கொரோனா தொற்றவில்லை என உறுதி செய்யப்பட்டால் சுற்றுலா பயணங்களுக்கு குறித்த பயணி அனுமதிக்கப்படுவார்.

எப்படியிருப்பினும் அந்த சுற்றுலா பயணிக்கு 5 நாட்களின் பின்னர் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களின் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மே...
உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசர தேவையாக உள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!