சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரலம சிங்க அறிவிப்பு!

Sunday, June 11th, 2023

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்.

இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கம் வருடாந்த சமையல் கலை மற்றும் உணவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்து வருகிறது.

இது இலங்கை முழுவதிலும் உள்ள சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது.

இந்தநிலையில், சமையல் துறையின் முன்னேற்றத்திற்காக, சமையல் கலை தொடர்பான பாடசாலையொன்றை ஸ்தாபித்தல், சமையல் கலைஞர்களை தரவரிசைப்படுத்தல் உள்ளிட்ட புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: