சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக இழுத்து மூடப்பட்டது சாவகச்சேரி திருமண மண்டபம் – சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தால் குறித்த திருமண மண்டபம் சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் வரை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது சமூக இடைவெளி பின்பற்றப்படாமை, முகக்கவசம் அணியாமை மற்றும் அனுமதியளிக்கப்பட்ட விருந்தினர்கள் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகளவான விருந்தினர்கள் மண்டபத்திற்கு சமுகமளித்தமை ஆகிய காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தளிர்ராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: