சீரற்ற காலநிலை : மரணம் 24 ஆக உயர்வு – பாதிப்பு 1,70,000 ஐத் தாண்டியது!
Tuesday, May 29th, 2018நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
20 மாவட்டங்களிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 45 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 310 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17 ஆயிரத்து 976 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 376 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளத்தினால் 121 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
முஸ்லிம் விவாக சட்டத்தில் மாற்றம்: குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
நீதிமன்ற தீர்ப்பிலேயே மாகாண சபை தேர்தல் உள்ளது - தேர்தல்கள் ஆணையாளர்!
20 ஆவது திருத்தச் சட்டம்தான் நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியது. - வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற...
|
|