சீனா- இந்தியாவுக்கு விசேட பொருளாதார வலயங்கள்!

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கையில் விசேட பொருளாதார வலயங்கள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
மருந்துப்பொருள் மற்றும் வாகன உதிரிபாக் கைத்தொழில் நடவடிக்கைகளை இந்தியா இந்த பொருளாதார வலயத்தில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டையில் சீனா சுமார் 15000 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்து அதில் பொருளாதார வலயமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் பாரியளவில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழில் நிபுணர்கள் இலங்கையில் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடனான பொருளாதார உடன்படிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தள்ளார்.
Related posts:
உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் நடுவராக குமார் தர்மசேன!
அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு தயார்!
அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்ப அனைத்து இலங்கை முஸ...
|
|