சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வெளியிட வேண்டாம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலூம், நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாக இருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிப்பதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த வழிகாட்டி டக்ளஸ் தேவானந்தா - முல்லைத்தீவு மக்கள் புகழாரம்!
பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்ப...
சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
|
|