சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தவிர்க்க சுற்றுநிருபம்!

Sunday, September 12th, 2021

மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிருபம்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபம், சகல மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்குவது மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்பார்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: