சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தவிர்க்க சுற்றுநிருபம்!

Sunday, September 12th, 2021

மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிருபம்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபம், சகல மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்குவது மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்பார்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உள்ளூராட்சித் தேர்தலில்  பெண்கள் அரசியல் ரீதியாகப் பங்கேற்பதிலுள்ள சவால்களை அடையாளம் காணுதல் தொடர்பா...
தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் - ச...
இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்ப...