சித்தியடையும் மாணவர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவு!

Tuesday, September 18th, 2018

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்மூலம் புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: