சா/தர விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடுப்பு!
Saturday, January 29th, 2022க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடக்கப்படுகின்றது..
கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்படுகிறது.
இந்த விசேட செய்முறைப் பரீட்சை நாடளாவிய ரீதியில் பல பரீட்சை நிலையங்களில் நடத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்தி...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!
|
|