சாவகச்சேரியில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!

Wednesday, November 8th, 2017

நேற்றுக் காலை-08.30 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை(08) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் யாழ். மாவட்டத்தில் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 69. 0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை(08) பிற்பகல் அவர் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 24 மணித்தியாலத்தில் யாழ். மாவட்டத்தில் திருநெல்வேலிப் பகுதியில் 59.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப் பகுதியில் 53.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், யாழ். நகர்ப் பகுதியில் 34.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலியில் 26.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நெடுந்தீவுப் பகுதியில் 22.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

20171108_144026

Related posts: