சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை தற்காலிகமாக நீடிக்க தீர்மானம்!

Thursday, September 22nd, 2022

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை  தற்காலிகமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகளுக்கு அமைவாக,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கட்டளைகளின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தற்காலிகமாக நீடிக்கப்படும்.

அதன்படி, இந்த கட்டளைகள், எதிர்காலத்தில் பாராளுமன்ற அனுமதிக்கு முன்வைக்கப்பட உள்ளன.

மேலும், இந்த குழுவில், உள்நாட்டு கார் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: