சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று!

Thursday, March 7th, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் இந்த மீளாய்வு அமர்வு இடம்பெறவுள்ளது.

இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இரண்டு வாரங்களுக்கு இரண்டாவது மீளாய்வு அமர்வு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான பரிசீலனையின் பின்னர், 3 ஆவது தவணையை அணுகுவதற்கு உடன்பாடு எட்டப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: