சமுர்த்தி திணைக்களத்தில் 7000 பேருக்கு நிரந்தர நியமனம்!

Saturday, December 1st, 2018

சுமார் 7000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நேற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அதிகாரசபையாக இருந்து சமுர்த்தி திணைக்களமாக்கப்பட்டதன் பின்னர் குறித்த திணைக்களத்திற்கு 27,000 பேருக்கு நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில் அதன்முதற்கட்ட நடவடிக்கையாக 7000 பேருக்கு குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை வழங்கிவைத்த இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் சமூகநலன்புரி அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துகலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

47345681_270500846948116_8789251306809196544_n

47220490_270500840281450_8248910645349580800_n

Related posts: