சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை!

Sunday, August 7th, 2016

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஏமாற்றிய குற்றச்சாட்டிற்காகவே குறித்த நபரை விசாரணைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.குறித்த சந்தேகநபர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதாக காணாமல் போனவர்களின் குடும்பங்களிடம் கூறி பண மோசடி செய்துள்ளார்.

பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பின்னர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரின் மரணம் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: