சதொச விற்பனை நிலையங்களில் விசேட உணவுப் பொதி விநியோகம்
Wednesday, April 12th, 2017
தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாவனையாளர்களின் நலன்கருதி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விசேட உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த விசேட உணவுப் பொதியில் மொத்தமாக 1515 ரூபா பெறுமதியுள்ள உணவுப் பொதி, 975 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எதிர்வரும் 20ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 10 இலட்சம் பொதிகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் இலக்கு என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.பால்மா, அரிசி, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் உட்பட பத்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இதில் அடங்கும் என்று சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
வெளியேற்றப்பட உள்ள பிரித்தானிய கழிவுகள்!
அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நிதி பற்றிய குழுவின் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பது உகந்ததல்ல - சபாநாயகர் அறிவிப்பு!
|
|
|


