சட்டவிரோதமாக தங்கிய 16 பேர் கைது!

Sunday, March 26th, 2017

வீசா காலாவதியான நிலையில், குடிவரவு விதிகளை மீறி, சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர் 16 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள், 09 இந்தியர்கள், 06 நைஜீரியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஒரு சில வெளிநாட்டவர்கள், இலங்கையின் வீசா நடைமுறைகளை மீறிய நிலையில், போதைப்பொருள், பண மோசடி, மனித கடத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களின் அடையாளம் உறுதிப்படுத்திய பின், நீதிமன்றில் சமர்ப்பித்து அதன் பின் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts: