கோப்பாய் வைத்தியசாலையில் 18 ஆயிரம் பேருக்கு சிகிச்சை- 111 பேர் டெங்கு நோயாளர்கள்

Sunday, January 20th, 2019

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடம் 18 ஆயிரம் வெளிநோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என கோப்பாய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் இவ் வைத்தியசாலையின் 5 நோயாளர்கள் விடுதிகளும் 65 நோயாளர்கள் படுக்கை வசதிகளும் உள்ளன.

இவ் வைத்தியசாலையில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 1550 பேர் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் இதில் 111 டெங்கு நோயாளர்களாக இனம்காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts:

இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல - எந்த நாட்டுடனும் இராஜதந்திர உடன்படிக்கைகளில் கைச்சாத்...
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில...
இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் - ரஷ்ய தூதுவர் தெரிவிப்ப...